வேம்பங்குடி குகன்

My photo
Pls comments or suggestions about this Blog. pilotguhan@gmail.com

Monday, March 21, 2011

April 13

April 13




ஊனமுற்றோர் தினம் என்றால் தேர்தல் நாளே
உகந்ததாய் இருக்கும் என்று உலகம் போற்றும்
ஞானமுற்றோர் பலர் வாழ்ந்த இந்த நாட்டில்
நல்லவர்கள் வாழ்பவர்கள் சொல்லுகின்றார்
மானமற்று மனைவி மக்கள் பேரன் பேத்தி
மன்னரைப் போல் தோரணைகள் கொண்டு வாழும்
ஊனமுற்ற தலைவர்களின் கூட்டம் வந்து
ஓட்டுகள் சேகரிக்கும் அந்த நாளே


நாமறிய நாடறிய உலகறிய
நலமொன்றும் அறியாத மக்கள் வாழ்வை
தாம் வாழ தன் குடும்பம் மட்டும் வாழ
தரித்திரத்தில் தள்ளிவிட்டு வரிப் பணத்தில்
தாம் தூம் என்றிலவசங்கள் தன்னைத் தந்து
தன் வீட்டுப் பணத்தில் அதைத் தந்தாற் போல
ஆம் ஆம் இங்கு நடிப்பவர்கள் அவர்களே தான்
அய்யா மன ஊனமுற்றோர் புரிந்தீரோ நீர்


நாணமில்லை வெட்கமில்லை மக்கள் முன்னர்
நடமாடித் திரிகின்றார் மீண்டும் வந்து
ஆணவத்தோ டாள்வோமென் றுரைக் கின்றார் காண்
அவர்களுக்கு காங்கிரசார் துணையானார் காண்
மானமற்ற காங்கிரசார் காந்தி நேரு
மக்களது தலைவர் காமராசரோடு
வான் புகழும் கக்கனையும் மறந்த தோடு
வாக்குகள் கேட்கின்றார் அம்மணமாய்


- நெல்லைக்கண்ணன்

No comments:

Post a Comment