வேம்பங்குடி குகன்

My photo
Pls comments or suggestions about this Blog. pilotguhan@gmail.com

Monday, October 31, 2011

♥ Ini Oru Vidhi Seivom ♥


Must Read :



500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி
” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.

கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர்.

பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி
அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து
“இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.

அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி
“இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்
அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.

அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும்
அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் ,
தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர்.

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொர்ருத் தனித் தன்மை இருக்கும்.
அதன் மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. வாழ்கை என்ற பயிர்க்கு
தைரியமும் தன்னம்பிக்கையும் தான் உரமும் பூச்சிக்கொள்ளிகளும்.
ஆகையால் தன்னம்பிக்கையை இழக்காமல் வாழுங்க By ♥ Ini Oru Vidhi Seivom

Friday, June 17, 2011

Twitter


****
ஸ்பெக்ட்ரம் : "20,000 மாதம். 35 வருசத்துக்கு 85 லட்சம் தேவைப்படுது. பிறகு, ஏன் இவ்வளவு கொள்ளையடிக்கிறாங்க!" அலுவலக பெண்மணி அப்பாவியாய்!

****
பல மாதங்களுக்கு பிறகு வங்கியில்... தாவணியில் ஒரு பெண்ணைப் பார்த்தேன். வேலைகளை விட்டுவிட்டு, வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

****

ஒரு பதிவை போட்டுட்டு...அதை மார்க்கெட்டிங் பண்ற வேலை இருக்கே! அய்யய்ய்ய்யோ!

****

விருதகிரி : சில படங்களை பார்த்தால் அலர்ஜி. சில படங்களின் பெயரைக் கேட்டாலே அலர்ஜி.

****

"என் கடைசி பிள்ளை தான் காப்பாத்துவான்னு, ஜோசியர் சொன்னது நடக்குதுன்னு" மணியார்டரை பெற்று சொல்கிறார் அம்மா. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.

****

உற்று கவனித்தேன். தனியாக தான் பேசிக்கொண்டிருந்தார். செல் வந்த பிறகு, எளிதாய் கண்டுபிடிக்க முடிவதில்லை.

****

உன்னோடு என் கோபம்
வார்த்தையில் மட்டும்தான்..
உள்ளத்தில் இல்லை..
உன் மீதான என் காதல்..
வெறும் வார்த்தையில் அல்ல ..
என் இதயத்தில்..

Kadhalan


என் இதயத்தில் காதல் என்னும்
அத்தியாயம் தந்தது நீ....

என் வாழ்க்கை என்னும் பாடத்தில்
வலிகள் நிறைந்த கண்ணீரை தந்ததும்நீ....

Thursday, June 9, 2011

நான் கடவுள் இல்லை .......

ஆமாம் நான் கடவுள் இல்லை.
என்ன பாக்குறீங்க , என்னை குடையும் சில கேள்விகளை உங்களிடம் கேட்க போகிறேன்.
பதில் தெரிஞ்சா சொல்லுங்க .. இல்லாட்டி என் வயறு எரிய நீங்க சிரித்து விட்டு போகலாம் ....

* தூரத்தில் அழகான பொண்ணு ஒன்னு சிரிச்சு , சிரிச்சு பேசி கிட்டே வந்து என்னை பார்த்தும் , அண்ணா நீங்க அந்த project ல இருக்கீங்க அப்படின்னு ஏன் கேட்குது ? ( பக்கத்தில் நிற்கும் சில தறுதலைகள் கோரசாக மச்சான்னு சொன்ன உங்களுக்கு எப்படி இருக்கும் ?)

* எப்போது ட்ராபிக் போலீசில் மாட்டினாலும் , பர்சில் ஏன் ஒரே ஒரு 500 ருபாய் மட்டும் இருக்கு ? *customer care -கு , நான் எப்போது போன் பண்ணினாலும் ஏன் ஒரு ஆம்பளை பேசுறான் ?

* நான் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் பொது மட்டும் , எல்லா நண்பர்களோட பிறந்தநாள் வரிசையாய் வருது ?

* நான் புதுசை ஜட்டி வாங்கினால் கூட treat கேட்கும் நண்பர்கள் , அவர்களுக்கு பிறந்தநாளுக்கு கூட எப்படி treat கொடுக்காமல் தப்பிக்கிறார்கள் ?

* பிரபலமான வலை உலக பிரம்மாக்களின் பதிவிற்கு நான் பின்னூட்டம் இட்டால் மட்டும் , அதை யாரும் சீண்ட கூட மாட்டேன் என்கிறார்கள் ?

* நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?

* எதாவது ஆன்லைன் பூகிங் நான் பண்ணும் போது மட்டும் சரியாக , லேப்டாப் பாட்டரி குறைஞ்சு பொசுக்குனு off ஆகுது ?

* என்னை காதலிக்க இல்லை , என்னை திட்டவாவது ஒரு கேர்ள் friend வேண்டும் என்று சொன்னால் , டேய் சுப்பர் டா .. நல்ல கவிதை என்று நக்கல் மட்டும் தவறாமல் வருவது ஏன் ?

* நான் demo காட்ட போன மட்டும் login page கூட சரியாக வருவது இல்லை .. ஏன் இப்படி எனக்கு மட்டும் ?

*புது சட்டை போட்டு , அலும்பல் கொடுக்கலாம் என்று நினைத்து காலையில் சாப்பிட ஹோட்டல் சென்றால் தவறாமல் என் மீது மட்டும் சாம்பார் கொட்டுவது ஏன் ?

நான் இதை பற்றி யாரிடம் பேசுவது கிடையாது .
ஏன்னா
" நீ நல்ல காமெடி பண்றடா "
" டைம் போகுறதே தெரியல போ "
" அப்புறம் இன்னைக்கு என்னடா நடந்துச்சு "
இப்படித்தான் எனக்கு பாராட்டு வருது ,
நீங்க என்ன சொல்றீங்க ? ஆனா இப்படி நடந்தே , எதையும் தாங்குற தைரியம் வந்திரிச்சு ...

"நீ ரொம்ப நல்லவன்டா" அப்படிங்குற சத்தம் எனக்கு கேட்குதுங்கோ...

தந்தை பெரியார்



கடவுள் இல்லை, கடவுள் இல்லை;
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்;
கடவுளை பரப்பியவன் அயோக்கியன்;
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி.

------- தந்தை பெரியார்.

Wednesday, June 8, 2011

Mr. Karunanidhi perumaigal


‘கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதும் பழங்காலத்து மொழி. தமிழ் நாட்டையே இந்தக் கடன், தலைகீழாகக் கவிழ்க்கக் காத்திருக்கிறது. 10 ஆயிரம் கைமாற்றாக வாங்கியவர்கள், திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால் பதறிப் போவதும்… வாங்கிய வீட்டுக் கடனை ஒரு மாதம் ஒழுங்காக அடைக்க முடியாமல் போனால், வங்கிக்காரர்களைப் பார்த்துப் பதுங்க ஆரம்பிப்பதும், மத்திய தர வர்க்கத்தின் அன்றாட வழக்கம். கிராமப்புறங்களில், கூட்டுறவுக் கடனை வசூலிப்பதற்காக அதிகாரிகள் வரும்போது, வயல் காடுகளை நோக்கி ஓடிப் போய் விவசாயிகள் பதுங்கிக்கொள்வார்கள். அவர்களைப் பிடிக்க நிலங்களுக்குள் அதிகாரிகளும் ஓடுவார்கள். இதைவைத்து எழுதப்பட்ட கி.ராஜநாராயணனின் ‘கதவு’ கதை கண்ணீர் வரவைக்கும். அசலையும் வட்டியையும் செலுத்த முடியாத விவசாயியின் வீட்டில் இருந்த நிலைக் கதவை அதிகாரிகள் எடுத்துச் செல்வதை உருகி உருகி எழுதி இருப்பார்.

‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றக் கெடும்’ என்ற வள்ளுவரின் குறளுக்குத் ‘தன் செல்வத்தின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை பல வளமும் இருப்பதுபோல் தோன்றி, இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்’ என்று மு.வ. முதல் மு.க. வரைக்கும் விளக்கம் சொல்லி இருக்கிறார்கள். இவ்வளவுக்குப் பிறகும் வெளிவந்துஇருக்கும் ஒரு செய்தி, பதறவைக்கிறது!

தமிழ்நாட்டின் இன்றைய மொத்தக் கடன் ஒரு லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. சரியாகச் சொன்னால், 1,01,541 கோடி! ‘நான் கடன் வாங்குறதும் இல்ல… கொடுக்கிறதும் இல்ல’ என்று சில ஜென்டில்மேன்கள் சொல்வார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன, உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்தது எல்லாம் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஊரெல்லாம் கடன் வாங்கிக் கொண்டு… யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கடன் வாங்கிக்கொண்டு, ‘தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் உறுதியான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது’ என்று நிதி அமைச்சர் அன்பழகன் எப்படிச் சொல்கிறார் என்றே தெரியவில்லை.

இன்றைய தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனையாகச் சொல்லப்படுவது, இலவசங்கள்தான். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இலவசங்களாகவோ, மானியமாகவோ வழங்கி னால், அதை மக்கள் நலத் திட்டம் என்று நினைத்து, தொடர்ச்சியாகச் செய்துவருகிறார்கள். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பது இதில் கவர்ச்சிகரமான முதல் திட்டம். மார்க்கெட் மதிப்பில் ஏழுக்கு விற்பனையாகும் அரிசிக்கு அரசாங்கம் ஆறு கொடுத்து விடுகிறது. மீதி ஒன்றுதான் பொது மக்களின் பாக்கெட்டில் இருந்து தரப்படுகிறது. இந்த அரிசியை வாங்கியவர்கள் அனைவரும் சாப்பிடுகிறார்களா என்றால், இல்லை. அதிக விலைக்கு வெளியில் விற்று, சம்பாதிப்பவர்களும் உண்டு. அல்லது மாவு மிஷின் ஆட்கள் இதை மொத்தமாக வாங்கி, அரைத்து விற்றுச் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இந்த அரிசியை வாங்குபவர்களில், அதிகபட்சம் 25 சதவிகிதம் பேர்கூட இதைப் பொங்கிச் சாப்பிடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அடுத்த கவர்ச்சித் திட்டம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி. 80 லட்சம் குடும் பங்கள் வரை இந்த கலர் டி.வி-யை வாங்கி இருக்கிறார்கள். இதை வைத்துப் பார்த்தால், 2006-க்கு முன்னால் தமிழ்நாட்டில் முக்கால் சதவிகித வீடுகளில் டி.வி-யே இல்லையா என்ன? இருக்கும் வீடுகளுக்கே இவர்களும் கொடுத்தார்கள். ஒரே வீட்டில் இரண்டு மூன்று டி.வி-க்கள் வரை இதனால் குவிந்தன. இவையும் அதிகபட்சம் 3,000 வரை விலை போனது.

நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை அநியாயமாக எகிறியது. விலை ஏன் திடீரென உயர்கிறது, அதைக் கட்டுப்படுத்துவது எப்படி என்றெல்லாம் ஆலோசனை செய்யாமல், நியாய விலைக் கடைகளில் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை அரசாங்கம் வழங்கியது. கலர் டி.வி-யைப்போலவே இலவச எரிவாயு இணைப்பும் அடுப்பும் தருவது தி.மு.க-வை வெற்றி பெறவைத்த வாக்குறுதிகளில் ஒன்று. கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ மற்றும் ‘கலைஞர் கான்கிரீட் வீடு கட்டும் திட்டம்’ ஆகிய இரண்டும் மக்களை ஏக்கப் பார்வை பார்க்கவைத்துள்ளன. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால், பொதுமக்கள் அடைந்த பயனைவிட, தனியார் மருத்துவமனைகள் அடைந்த பயன்கள்தான் அதிகம். தேவை இல்லாமல் ஆபரேஷன்கள் செய்கிறார்கள் என்று ஒரு புறமும்… இன்று ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கு அரசாங்கம் தரும் இன்ஷூரன்ஸ் பணம் சொற்பமானது என்று மறுபுறமும் கவலை ரேகைகள் படர்ந்து வருகின்றன. கான்கிரீட் வீடுகள் கட்ட அரசாங்கம் தரும் 75 ஆயிரம், இன்றைய நிலையில் நிலம் தோண்டி சுற்றுச் சுவர் எழுப்புவதற்குக்கூடப் போதுமானது அல்ல. இப்படிப்பட்ட இலவசத் திட்டங்களுக்காகத்தான் கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கம் கடனாக வாங்குகிறது.

”கடன் வாங்காதே என்று சாதாரணமாக எல்லோரும் சொல்வார்கள். ஆனால், இந்தக் கடனில்தான் தமிழகம் வாழ்கிறது” என்று சொல்கிறார் நிதி அமைச்சர். ”இம்மாதிரியான கடனால் தமிழகம் வாழவில்லை. தி.மு.க-தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது” என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம்… இதைத் தருவோம்… என்று வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார் கருணாநிதி. இலவசங்களால் நிரம்பிய அந்த அறிக்கைக் குத்தான், ‘தேர்தல் கதாநாயகன்’ என்று நிதித் துறையில் கரை கண்ட ப.சிதம்பரம் பட்டமும் கொடுத்தார். அத்தனைப் பொருட்களையும் அரசாங்கமே கொடுத்துவிடும் கம்யூனிச சமுதாயத்தை நோக்கிய பயணமாக இதைக் கருணாநிதி பார்த்தது காலத்தின் கோலம்.

”இலவசம் என்பது கேலிக்கு உரியதல்ல. ஒரு காலத்தில் இலவசம் எவ்வளவு பெருமைக்கு உரியதாக இருந்தது தெரியுமா? மேல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தான தர்மம் கொடுப்பதுதான் இந்த உலகத்திலேயே பெரிய புண்ணியமாகச் சொல்லப்பட்டது. ஆக, மேல் சாதிக்கு தான தர்மம் கொடுத்தால் சரியானது. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது கேலியா?” என்று நிதி அமைச்சர் அன்பழகன் கேட்கிறார். அரசாங்கம் இப்போது வழங்கும் அத்தனை இலவசங்களும் சலுகைகளும் ஏழை களுக்கு மட்டும்தான் போய்ச் சேர்கின்றனவா? ஆளும் நாற்காலியைப் பிடித்திருக்கும் ஒரு கட்சி, தனக்கு வாக்கு அளித்த மக்களுக்கு, அல்லது வாக்களிக்கப் போகும் மக்களுக்குத் தரும் மறைமுக ‘லஞ்சமாகவே’ இந்த இலவசங்கள் இருக்கின்றன என்பதை யாரால் மறுக்க முடியும்? ”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இவை அனைத் தையும் நிறுத்திவிடுவார்” என்று துணை முதல்வர் ஸ்டாலின் ஊர் ஊராகச் சொல்லி வருவதே உண்மைக் காரணத்தை உணர்த்திவிடுகிறது.

கருணாநிதியைப் பற்றி கேள்வி கேட்டால், ஜெயலலிதா பற்றி பதில் சொல்வதுதான் இன்றைய பாணி. ‘ஒரு லட்சம் கோடி கடன் வைத்து இருக்கிறீர்களே? இது நியாயமா?’ என்று எதிர்க் கட்சிகள் சட்டசபையில் கேள்வி கேட்டார்கள். ‘ஜெயலலிதாவும் அவரது ஆட்சியில் கடன் வாங்கத்தான் செய்தார்’ என்று அன்பழகன் பதில் அளித்துள்ளார். 2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியை விட்டு விலகும்போது, வைத்துவிட்டுப்போன கடன் 28 ஆயிரம் கோடி.

2006-ம் ஆண்டு ஜெயலலிதா பதவி விலகும் போது, அதை 56 ஆயிரம் கோடியாக மாற்றினார். கருணாநிதியின் ஆட்சிக் காலம் இப்போது முடியும்போது, அது ஒரு லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. வாங்கிய கடனைக் கட்டவில்லை, அதற்கான வட்டியும் அபராத வட்டியும் செலுத்தவில்லை, மேலும் புதிதாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த மூன்றும் சேர்ந்து தான் எகிறியிருக்கிறது.

”உணவு மானியமாக 4,000 கோடி போய்விடுகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கு 2,632 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார வாரியத்துக்கு மான்யம் 681 கோடி, முதியோர் பென்ஷனுக்காக 1,379 கோடி. இப்படியே ஆண்டுதோறும் செலவு கூடிக்கொண்டே போவதால்தான், பழைய கடன்களை நம்மால் கட்டவும் முடியவில்லை. இவை எதுவும் லாபம் வரக் கூடிய தொழில்கள் அல்ல. அடுத்த ஆண்டுக்கு மறுபடியும் கடன் வாங்கியே இதற்கும் ஒதுக்க வேண்டியிருக்கிறது” என்று நிதித் துறை அதிகாரி சொல்கிறார்.

மத்திய அரசாங்கம் கொண்டுவந்துள்ள பொறுப்புரிமைச் சட்டத்தின் படி, ஒரு மாநில அரசாங்கம் அதன் உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதத்துக்கு மேல் கடன் வாங்கக் கூடாது என்று இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் தமிழ்நாடு தாண்டிவிட்டது. தேர்தல் நெருங்கி வருவதால் பயம் அதிகமாகிறது. கிரைண்டர் தருவோம், மிக்ஸி தருவோம்… என்று எந்தக் கட்சி வாக்குறுதி தந்தாலும், அது இலவசம் அல்ல. உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரைச் சொல்லி கடன் வாங்கித்தான் தருகிறார்கள்.

இவர்கள் போதாது என்று மத்திய அரசாங்கம் வாங்கும் கடன் கணக்கு மலைப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் சமீபத்திய கடன் 31 லட்சத்து 6 ஆயி ரத்து 322 கோடி. சராசரி இந்தியனின் ஆண்டு வருமானம் 38 ஆயிரம் என்று வைத்துக்கொண்டால், அவனது 10 மாதச் சம்பளம் கடனாக உள்ளது என் கிறார்கள்.

‘மன்மோகன் சிங்கைவிட நான் பரவாயில்லை’ என்று கருணாநிதி சொல்லிக்கொள்ளலாம்.

நமக்கென்ன பேசவா தெரியாது!

எம்.ஆர்.வெங்கடேஷ் (ஆடிட்டர்)”நான் கடன் வாங்குவதைக் குறை சொல்ல வில்லை. எதற்கு செலவு செய்கிறார்கள் என்பதைத் தான் கண்டிக்கிறேன். சாலைகள், பள்ளிகள், மருத் துவமனைகள் அமைப்பது தவறில்லை. ஆனால், டி.வி. கொடுப்பது போன்ற சமுதாய ஆடம்பரங்களால் இந்த நாட்டுக்குத்தான் நஷ்டம்.

ஒரு லட்சம் கோடிக்கு ஆண்டுக்குப் பல ஆயிரம் கோடி வரைக்கும் நாம் வட்டி கட்ட வேண்டும். இந்த வட்டியை வைத்தே எத்தனையோ நலத் திட்டங்களைச் செயல்படுத்தலாம். எத்தனை தலைமுறை ஆனாலும் இந்தக் கடனையும் வட்டியையும் நாம் திருப்பிச் செலுத்தித்தான் ஆக வேண்டும். இதை அரசாங்கம் முதலில் உணர வேண்டும். அதைவிட, மக்களும் உணர வேண்டும். குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியை 2007-ம் ஆண்டு நான் சந்தித்தபோது, ‘நான் ஆட்சிக்கு வந்தால் முறைப்படி வரி போடுவேன். அதைத் செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பு வேன்’ என்று சொன்னார். ‘உங்களை எதிர்த்து நிற்கும் கட்சி டி.வி. தரப் போவதாகச் சொல்கிறதே?’ என்றதும், ‘எங்கள் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்’ என்றார். அதே மாதிரியே மோடி வென்றார். இலவசங்களை ஏற்க மாட்டோம் என்ற மனோபாவம் மக்களுக்கு வேண்டும். இலவசமாகச் சோறு போட்டால் ராத்திரி வரைக்கும் வேலை வாங்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அது போன்ற பூதாகரமான சோதனை பொதுமக்களுக்குக் காத்திருக்கிறது.

அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கும்போது படிப்படியாக அனைத்து திட்டப் பணிகளும் பாதிக்கும். நாம் அடுத்து சந்திக்கப் போகும் நெருக்கடி அதுவாகத்தான் இருக்கும். வட்டி நின்று கொல்லும் என்பார்கள். அந்த நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!”

பாலபாரதி (மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ)

”கடன் வாங்கி மின் உற்பத்தி, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்குப் பயன்படுத்தியிருந்தால் வரவேற்கலாம். வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் வாங்குவதாகச் சொல்லி, கவர்ச்சித் திட்டங்களுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். எந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற தீர்க்க சிந்தனை இல்லாததுதான் இதற்குக் காரணம். எத்தனையோ குடிநீர்த் திட்டங்கள் நிதி இல்லாமல் கிடக்க… அனைவருக்கும் டி.வி. கொடுத்து முடித்துவிட்டார்கள்.

அடுத்துச் சொல்ல வேண்டிய குறைபாடு, வருமான வழிமுறைகளைச் சரியாகப் பயன் படுத்தவில்லை. ஒரு யூனிட் மணலை பொதுப்பணித் துறையில் இருந்து 900 -க்கு வாங்கி, 14 ஆயிரத்துக்கு தனியார் விற்பனை செய்கிறார்கள். அரசாங்கத்துக்கு வர வேண்டிய ஆதாயம் தனியாருக்கு செல்கிறது. இந்த மணல் கொள்ளையைத் தடுத்து இருந்தால் இந்த அளவுக்குக் கடன் வாங்கிஇருக்கவே தேவையில்லை!”

Kadavulavadhu Vengayamavadu

Natta Kallai Theivam endru,

Naalu pushpam satriyae

Sutri Nindru mona mona endru, sollum mantram ethada

Natta Kallum Paesumo,

Nathan ulliruckayil....!!


>>>>>>>>>>------------Sithar Vaaku



Monday, March 21, 2011

April 13

April 13




ஊனமுற்றோர் தினம் என்றால் தேர்தல் நாளே
உகந்ததாய் இருக்கும் என்று உலகம் போற்றும்
ஞானமுற்றோர் பலர் வாழ்ந்த இந்த நாட்டில்
நல்லவர்கள் வாழ்பவர்கள் சொல்லுகின்றார்
மானமற்று மனைவி மக்கள் பேரன் பேத்தி
மன்னரைப் போல் தோரணைகள் கொண்டு வாழும்
ஊனமுற்ற தலைவர்களின் கூட்டம் வந்து
ஓட்டுகள் சேகரிக்கும் அந்த நாளே


நாமறிய நாடறிய உலகறிய
நலமொன்றும் அறியாத மக்கள் வாழ்வை
தாம் வாழ தன் குடும்பம் மட்டும் வாழ
தரித்திரத்தில் தள்ளிவிட்டு வரிப் பணத்தில்
தாம் தூம் என்றிலவசங்கள் தன்னைத் தந்து
தன் வீட்டுப் பணத்தில் அதைத் தந்தாற் போல
ஆம் ஆம் இங்கு நடிப்பவர்கள் அவர்களே தான்
அய்யா மன ஊனமுற்றோர் புரிந்தீரோ நீர்


நாணமில்லை வெட்கமில்லை மக்கள் முன்னர்
நடமாடித் திரிகின்றார் மீண்டும் வந்து
ஆணவத்தோ டாள்வோமென் றுரைக் கின்றார் காண்
அவர்களுக்கு காங்கிரசார் துணையானார் காண்
மானமற்ற காங்கிரசார் காந்தி நேரு
மக்களது தலைவர் காமராசரோடு
வான் புகழும் கக்கனையும் மறந்த தோடு
வாக்குகள் கேட்கின்றார் அம்மணமாய்


- நெல்லைக்கண்ணன்

Thursday, March 17, 2011

Caught Snapping

Caught Snapping

Our Government rules given below:

Vehicle registration and rules of India

The numbers for license plates, commonly known as 'number plates' in India, are issued by the Regional transport office of each district but vehicle owners have private shops make the plates after registration. The scheme comprises a two letter identification for the state in which the vehicle is registered. It is followed by a two number code to identify the district.

This is often followed by a series code, e.g. 14C is the fourteenth series for private cars and 2M is the second series for motorbikes. Recently many states have been adapting the dual letter series code system, for example car series' are CA, CB, CC; motorbike series' are MA, MB and so on. Finally a four-digit number is used to uniquely identify the vehicle. Most states however still use the standard series code, denoted by a single letter of the alphabet. When the alphabet reaches Z, the length of the prefix is increased to 2. So after PY-01 9999, the next number is PY-01 A 0001 and after PY-01 Z 9999 it is PY-01 AA 0001 and so on...